அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளி துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு..!!

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் 21 பேர் பலியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு மே 24ம் தேதி உவால்டேவில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க பள்ளியில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, பொதுமக்கள் பலர் ஒன்று கூடி மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

The post அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளி துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: