தேக்கடி ஏரியில் கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கேரள வனத்துறை சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் நுழைவுக்கட்டணமாக ரூ.70, படகு சவாரிக்கு ரூ.385 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். பெரும்பாலானோர் படகு சவாரி செல்ல ஆர்வம் காட்டுவதால், படகுத்துறையில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே படகு சவாரிக்கு டிக்கெட் கிடைப்பதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
The post விடுமுறையையொட்டி குவியும் சுற்றுலாப்பயணிகள்: தேக்கடியில் படகு சவாரிக்கு பலத்த போட்டி appeared first on Dinakaran.