பழுதான கடிகாரம் சேற்றில் சிக்கிய கிட்டாச்சி இயந்திரம் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை

 

திருச்சி, மே 24: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் பயின்று வரும் சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆர்.சி செட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் இளம்சூரியன் (29). இவர் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை (எம்.எஸ்) மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் பட்ட மேற்படிப்பு முடிவடையும் நிலையில், நேற்று இரவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள, விடுதியில் அவரது அறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பட்ட மேற்படிப்பு முடியும் நிலையில் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பழுதான கடிகாரம் சேற்றில் சிக்கிய கிட்டாச்சி இயந்திரம் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: