கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, மே 23: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 26ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: