5 பெட்டி கடைகளுக்கு அபராதம்

 

திருப்பூர், மே 23: திருப்பூர் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தெற்கு போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உதவியோடு வெள்ளியங்காடு, உஷா தியேட்டர் பகுதி, சந்தை பேட்டை, கேஎம்ஜி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 பெட்டி கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து விற்பனைசெய்யும் பட்சத்தில் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

The post 5 பெட்டி கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: