15 வேலம்பாளையம் பகுதியில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

திருப்பூர், மே 23: திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட 15-வேலம்பாளையம் பகுதி திமுக சார்பில், 1, 9, 10 15 ஆகிய வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மகேந்திரன், ஸ்ரீதர், சசிகுமார், குட்டிக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ, வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். இதில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார் காலனி எம்.எஸ்.மணி, வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாண்டியன் நகர் பகுதி செயலாளர் ஜோதி 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post 15 வேலம்பாளையம் பகுதியில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: