கரூர் ஒன்றிய பகுதியில் ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக வரி கட்டும் வசதி

 

வேலாயுதம்பாளையம், மே 23: கரூர் மாவட்டம் வேட்டமங்கலம், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை, என்.புகளூர் ஆகிய ஊராட்சிகளில் 2023-24-ம் ஆண்டில் ஊராட்சிகளின் வீட்டு வரி, குடிநீர் வரி கேட்பு நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை நேற்று முதல் அறிமுகமாகிறது. கிராம ஊராட்சிகளில் செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி என அனைத்து வரிகளும் இனி ஆன்லைன் வாயிலாக மட்டும் செலுத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு இனி ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மூலமே செலுத்த வேண்டுமென ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கரூர் ஒன்றிய பகுதியில் ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக வரி கட்டும் வசதி appeared first on Dinakaran.

Related Stories: