இதனை தொடர்ந்து, நேற்று திரவுபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அருகே களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து வைத்து பஞ்சவர்ணம் பூசி நாடக நடிகர்கள் பீமன் – துரியோதனன் வேடமிட்டு மகாபாரதத்தில் போரிடும் போர்க்களக் காட்சிபோல தத்ரூபமாக நாடகம் நடித்துக்காட்டினர். பின்பு, திரவுபதியம்மன் கூந்தல் முடிதல், பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
The post செம்பூண்டி கிராமத்தில் துரியோதனன் படுகளம் appeared first on Dinakaran.