இதையொட்டி தினமும் மாலையில் வெலம கண்டிகை, ராமலிங்காபுரம், ராமநாதபுரம், பெரிஞ்சேரி, ராமகுப்பம், மைலாப்பூர், புதுச்சேரி, அனுமந்தாபுரம், போந்தவாக்கம் ஆகிய கிராமங்ளை சேர்ந்த பக்தர்களின் பஜனை நிகழ்சியும் அரி கதா காலேட்சேபமும் நடைபெற்றது.
7வது நாளான இன்று காப்பு கட்டி, மஞ்சள் ஆடை அணிந்த 210 பக்தர்கள் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு உற்சவரான ஆஞ்சநேயரை டிராக்டரில் ஊர்வலமாக வந்து தீ மிதிக்கும் இடத்தில் நின்றது. இதன் பின்னால் ஊர்வலமாக வந்த பக்தர்கள் அக்னி குண்டத்தை 3 முறை வலம் தீ மிதித்தனர். இதன்பின்னர் உற்சவரான ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
The post வெலமகண்டிகை கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயிலில் தீ மிதி விழா appeared first on Dinakaran.