குமரியில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம் 27ம் தேதி வரை நடக்கிறது

நாகர்கோவில், மே 21 : குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : குமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நீண்ட நாட்கள் நிலுவையிலுள்ள இணையவழி பட்டா மாறுதல் மனுக்கள் மீதான நடவடிக்கையினை முடிவு செய்யும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த 10.3.2023 தேதிவரை இணையவழி பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்த நில உடமைதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் வைத்து நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது கிராமங்களுக்கான தேதி விபரத்தை அறிந்து சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். கடந்த 19.5.2023 தொடங்கிய முகாம், வரும் 27.5.2023 முடிய நடைபெற உள்ளது.

The post குமரியில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம் 27ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: