முதற்கட்டமாக ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்றடைந்த அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹிரோஷிமா மாநகர மேயர், கவுன்சில் உறுப்பினர்கள் , ஜப்பான் அரசுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.உலக அமைதிக்காக காந்தியின் அகிம்சா கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டும் இது தான் காந்திக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்,”என்றார். தொடர்ந்து பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடாவை ஹிரோஷிமாவில் சந்தித்தார். பல்வேறு துறைகளிலும் இந்தியா – ஜப்பான் உறவுகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து உரையாடியதாகவும் வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சார பரிவர்த்தனைகள் குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.