திருப்பூரில் ஓட்டல் உரிமையாளர் காரை திருடியவர் கைது

 

திருப்பூர், மே 18: திருப்பூரில் ஓட்டல் உரிமையாளர் காரை திருடியவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்தவர் மோகன்குமார் (40). இவர் பிச்சம்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி வழக்கம்போல் ஓட்டலுக்கு வந்த மோகன்குமார் காரை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றார். மேஜை மீது கார் சாவியை வைத்து விட்டு வேறு வேலை செய்தார். அப்போது மர்ம நபர் கார் சாவியை திருடிய வெளியில் நிறுத்தியிருந்த காரை திருடிச்சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது கார் திருட்டுப்போனதை அறிந்த மோகன்குமார் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில் காரை திருடியது பச்சாபாளையத்தை சேர்ந்த துரை (47) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், துரையை கைது செய்தனர்.

The post திருப்பூரில் ஓட்டல் உரிமையாளர் காரை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: