திருவாரூரில் தயாளு அம்மையார் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டகத்தை 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். கள்ள சாராய விவகாரத்தை அரசியலாக பார்க்க வேண்டாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனை அரசியலாக பார்ப்பவர்கள் மற்றும் மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் சிறுமுகத்தைதான் காண்பிக்குமே தவிர உயர்ந்த உள்ளத்தை காட்டாது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையை பின்பற்றி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பத்திரிகைகள் கருத்து தெரிவித்தன. இந்த வெற்றி என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருவாரூரில் கலைஞர் கோட்டகம் ஜூன் 15ல் நிதிஷ்குமார் திறக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.