திருப்பதி மலைப்பாதையில் விபத்தில் 2 பெண்கள் பலி

திருமலை:ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தரிசனம் செய்து விட்டு திருமலையிலிருந்து திருப்பதிக்கு மலைப்பாதையில் காரில் பயணம் மேற்கொண்டனர். அப்போது, 24வது வளைவில் உள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபாடு செய்ய வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது, திருப்பதி நோக்கி திருமலையில் இருந்து வந்த மற்றொரு கார் பிரேக் பிடிக்காததால், நின்றிருந்த கார் மீது மோதியது. இதில் பர்வதம்மா(70), ரேணுகாம்மா(24) உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் விபத்தில் 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: