மகனுக்காக விளையாடுகிறேன்: பியூஷ்சாவ்லா நெகிழ்ச்சி

இந்த போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 4 ஓவர் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். வெற்றிக்கு பின் பியூஷ் சாவ்லா கூறுகையில், நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடியபோது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான். ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், எனது பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம்’’ என்றார்.

The post மகனுக்காக விளையாடுகிறேன்: பியூஷ்சாவ்லா நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: