₹7லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், மே 13: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. நேற்று நடந்த சந்தையில் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க, விவசாயிகளும், வியாபாரிகளும் வந்திருந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் 260க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடு ₹5,200 முதல் ₹14,900 வரை விற்பனையானது. இதில் மொத்தம் ₹7லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹7லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: