சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

மதுரை, மே 13: மதுரை பசுமலை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19), சிறுமி வீட்டிற்கு வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவிக்க, அவர் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: