முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்தது. முதல் கட்ட பேட்ச் வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 வருடங்கள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரயில்வேயின் 1ம் நிலை பணிகளில் 10 சதவீதம், 2 ம் நிலை பணிகளில் 5 சதவீதமும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் வயது வரம்பில் 5 வருடங்கள் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
The post லெவல் 1ல் 10%, லெவல் 2ல் 5% அக்னிவீரர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு: ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.