சீர்காழி அருகே விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்று விட்டு நாடகமாடிய அதிமுக பிரமுகர் கைது..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்று விட்டு நாடகமாடிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அதிமுகவை சேர்ந்த பெருந்தோட்டம் ஊராட்சி துணைத் தலைவர் பாஸ்கரன், டிராக்டர் ஓட்டுநர் பாலா கைது செய்யப்பட்டனர். விவசாயி ராஜேந்திரனின் நிலத்தில் செங்கல் சூளைக்காக ஊராட்சி துணைத்தலைவர் பாஸ்கரன் மண் எடுத்துள்ளார். நிலுவை பணத்தை தராமல் மீண்டும் மண் எடுக்க முயன்றதை ராஜேந்திரன் தடுத்ததால் டிராக்டர் ஏற்றிக் கொன்றனர். டிராக்டர் ஏற்றிக் கொலை செய்து விட்டு விபத்து போல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

The post சீர்காழி அருகே விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்று விட்டு நாடகமாடிய அதிமுக பிரமுகர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: