இதில் இரு `டக்-அவுட்’டும் அடங்கும். பேட்டிங்குக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம். பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோஹ்லி (419 ரன்), டூ பிளஸ்சிஸ் (511 ரன்) தொடர்ந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், மிடில் வரிசை ஒருசேர கைகொடுக்காததால் ஆர்சிபி திணறுகிறது. குறிப்பாக அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சில ஆட்டங்களில் மட்டுமே சிறப்பாக ஆடி உள்ளார். பந்து வீச்சில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (7 ஆட்டத்தில் 7 விக்கெட்) இன்னும் முழுமையான திறமையை காட்டவில்லை. ஆர்சிபி ஒருங்கிணைந்து ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மும்பையை வீழ்த்தலாம்.
The post ஐபிஎல் இன்றைய போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை-ஆர்சிபி மோதல் appeared first on Dinakaran.