அந்த வகையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் அருகே வேளிங்கப்பட்டரை கிராமம், ஜீயர் நாராயணபாளையம் தெருவை சேர்ந்த ராதிகா (மாற்றுத்திறனாளி) என்பவர், பேட்டரியில் இயங்கும் சிறப்பு நாற்காலி வண்டி வழங்கக்கோரி மனு அளித்துள்ளதை தொடர்ந்து, மனுதாரருக்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமைக் கொடை நிதியிலிருந்து ரூ.99,900 மதிப்பாலான சிறப்பு மூன்று சக்கர வண்டியை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனம்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.