எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்க முப்பெரும் விழா

தஞ்சாவூர், மே 8: தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் தஞ்சையில் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அருண், பொருளாளர் சோலையப்பன், துணைத்தலைவர் திருமலை ராஜன், துணைச்செயலாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மாநிலத் தலைவர் மாயாண்டி கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தும், கொடி ஏற்றி வைத்தும் பேசினார். இதன்பின்னர் தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு சாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் கிடைக்கப்பெறும் பண பயன்களை அதிகப்படுத்துதல் வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்க முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: