ஜனநாயக நடைமுறைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை: லண்டனில் துணை ஜனாதிபதி பேச்சு

லண்டன்: லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ்க்கு நேற்றுமுன்தினம் முடிசூட்டு விழாவில். இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் லண்டனில் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், “இந்தியாவை போன்று பேச்சுரிமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

ஜனநாயக நடைமுறைகள் மீது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. நம் நாட்டில் அமைப்பின்மையின் காரணமாக நாம் பாதிக்கப்படுகிறோம். பல வளர்ந்த நாடுகளில் ஒரே அமைப்பு இருப்பதால் அவைகள் சாதாரணமாக வளர்கின்றன. அதேசமயம், கடந்த 8 ஆண்டுகளில், நாமும் அமைப்பு முறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். சூப்பர் பவராக இந்தியா மாறி வருகிறது” என்றார்.

The post ஜனநாயக நடைமுறைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை: லண்டனில் துணை ஜனாதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: