முதலமடை அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

 

பாலக்காடு,மே6: கேரள – தமிழக எல்லை கோவிந்தாபுரத்தை அடுத்த முதலமடை கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலை அடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து விளைச்சல் நிலங்களை துவம்சம் செய்துவிட்டு செல்வதால் விவசாயினர் கவலை அடைந்துள்ளனர். முதலமடை கிராமப் பஞ்சாயத்திற்கு உட்படுகின்ற பரம்பிக்குளம் வனப்பகுதிகளிலிருந்து இரை மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் கூட்டமாக வருகின்றன. மேலும், காட்டுப்பன்றிகள் உட்பட வனவிலங்குகள் அடிக்கடி தோட்டத்திற்குள் புகுந்து விளைச்சல் பயிர்களை துவம்சம் செய்து நாசப்படுத்தி வருகின்றன.

The post முதலமடை அருகே காட்டு யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: