திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்யவும், புதியதாக குடியிருப்புகள் உருவாகும் பகுதியில் புதியதாக மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் எனவும் தெரு விளக்குகள் அமைக்க வேண்டியும் மனு அளித்துள்ளனர். அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது குறித்து ஆலோசித்தனர். கூட்டத்தில் உதவி செயற் பொறியாளர்கள் குமார், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, கஜேந்திரன், பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா, வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: