ஆவடி காவல் ஆணையரக பகுதியில் குற்ற வழக்கில் கைதான 6 பேருக்கு குண்டாஸ்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட அரும்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (30), திருவேற்காட்டை சேர்ந்த தேவராஜ் (31), வினோத் (34) மற்றும் கிருஷ்ணா நகரை சேர்ந்த முருகன் (48) ஆகியோரை இன்ஸ்ெபக்டர்களின் பரிந்துரையின் பேரில், நேற்றுமுன்தினம் மாலை 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதேபோல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செங்குன்றத்தை சேர்ந்த தினேஷ் (24), ஆதாய கொலை வழக்கில் கைதான வெங்கடேசன் (39) ஆகியோரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 6 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் நடப்பாண்டில் இதுவரை 120 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆவடி காவல் ஆணையரக பகுதியில் குற்ற வழக்கில் கைதான 6 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: