இந்த கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும். பின்னர் அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும். இந்த கட்டணம், பயணி புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், அந்தந்த விமான நிலையங்களில், பயணிகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுந்தாற்போல் மாறுபட்டு இருக்கும்.
The post சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் மேம்பாட்டு கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.
