தெத்தூர் மேட்டுப்பட்டி அழகு முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா

 

அலங்காநல்லூர், மே 4: தெத்தூர் மேட்டுப்பட்டி அழகு முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர் மேட்டுப்பட்டியில் ஆயிர வைசியர் இந்து சோழிய செட்டியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அழகு முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளில் அழகு முத்தாலம்மனுக்கு முளைப்பாரி அழைத்து கரகம் ஜோடித்து அம்மன் வீதி உலா வந்தது.

தொடர்ந்து மூன்றாவது நாள் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசியர் இந்து சோழிய செட்டியார் உறவின்முறை மற்றும் நேதாஜி இளைஞர் மன்றம் செய்திருந்தனர்.

The post தெத்தூர் மேட்டுப்பட்டி அழகு முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா appeared first on Dinakaran.

Related Stories: