வத்தலக்குண்டுவில் பரிசளிப்பு விழா

வத்தலக்குண்டு, மே 3: வத்தலக்குண்டு காங்கிரஸ் கோல்டன் ஜூபிலி கிளப் ஆண்டு விழாவை முன்னிட்டு செட்டில் காக், டேபிள் டென்னிஸ், வாலிபால், செஸ் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடந்தது. தலைவர் நாகராஜன் தலைமை வகிக்க, செயலாளர் மலைச்சாமி, பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகி பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார்.

புதிய தலைவராக மீண்டும் நாகராஜனும், செயலாளராக செல்வகுமாரும், பொருளாளராக விஜயகுமாரும் ஏகமனதாக தேர்வு பெற்றனர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் உள்பட பலருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வக்கீல் ஆறுமுகம் தொகுத்து வழங்கினார். இதில் நிர்வாகிகள் ராஜராஜன், திருமணி, அலெக்ஸ், அழகு, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.

The post வத்தலக்குண்டுவில் பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: