கல்யாணம் பண்ணாமல் 2வருடமாக பிலிப்பைன்ஸ் பெண்ணும், தமிழக வாலிபரும் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை: 9 மாத குழந்தையுடன் திருவாரூரில் திருமணம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு சொக்கலிங்கம், புஷ்பலதா தம்பதியின் மகன் ரமேஷ்அரவிந்தர் (33). 10 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்ற இவர், ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கு பிலிப்பைன்சை சேர்ந்த ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ(32) என்ற கிறிஸ்தவ பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அங்கேயே 2 வருடம் ‘லிவிங்டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ரமேஷ் அரவிந்தர், ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ, 9மாத கைகுழந்தை ரேகா ஷிலோவுடன் பிலிப்பைன்ஸில் இருந்து சொந்த ஊரான திருவாரூர் வந்தார்.

ஒரு வாரத்திற்கு முன் இந்து முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க ரமேஷ் அரவிந்தர், ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோவுக்கு தாலி கட்டினார். குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஆசிர்வாதம் செய்தனர். இதையடுத்து முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு குழந்தையுடன் நேற்று சென்று தம்பதியர் இருவரும் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். சார் பதிவாளர் ரவிபாலா, அங்கீகாரம் செய்து திருமணத்தை பதிவு செய்தார். அப்போது முறைப்படி இருவருக்கும், மணமகன் ரமேஷ் அரவிந்தரின் சகோதரி அம்பிகா ரோஜாப்பூ மாலை அணிவித்து வாழ்த்தினார்.

The post கல்யாணம் பண்ணாமல் 2வருடமாக பிலிப்பைன்ஸ் பெண்ணும், தமிழக வாலிபரும் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை: 9 மாத குழந்தையுடன் திருவாரூரில் திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: