அப்போது சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த சிறுமி, எங்கள் பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். என்னை போன்று மேலும் 4 சிறுமிகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தனர் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். புகாரின்படி, 4 சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து, ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
The post விழுப்புரம் அருகே பரபரப்பு 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.