திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதலான எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 59 ஆயிரத்து 71 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 651 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. அதில், ரூ.4.12 கோடி காணிக்கை கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகள் மட்டுமே பக்தர்களால் நிரம்பியது. இதனால், இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் 3 மணிநேரமும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: