திருவாடானை அருகே பழுதடைந்துள்ள ஹைமாஸ் லைட்டை சரி செய்ய வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை அருகே பழுதடைந்துள்ள ஹைமாஸ் லைட்டை பழுதுநீக்கி சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் வழியாக தொண்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த இரு தேசிய நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. இந்த ரவுண்டானா பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு எனப்படும் ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த ஹைமாஸ் லைட் எரியாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக வாகனங்களில் வரும்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் நான்குரோடு சந்திப்பு சாலையான இந்த ரவுண்டானா பகுதியில் ஹைமாஸ் லைட் எரியாததால் வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே நான்கு ரோடு சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் பல மாதங்களாக எரியாமல் பழுதடைந்துள்ள ஹைமாஸ் லைட்டை பழுதுநீக்கி சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை அருகே பழுதடைந்துள்ள ஹைமாஸ் லைட்டை சரி செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: