பிரபல நகை கடையில் இருந்து 28 கிலோ வெள்ளியுடன் தலைமறைவானவர் கைது

விருகம்பாக்கம்: தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடைக்கு சொந்தமான 28.4 கிலோ வெள்ளி பொருட்களை பாலீஸ் செய்வதற்காக, கடையின் ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள பாலீஸ் போடும் கடை நடத்தி வரும் அக்பர் அலி (41) என்பவரிடம் சில நாட்களுக்கு முன்பு கொடுத்தனர்.

ஆனால், வெள்ளி பொருட்களை வாங்கிய அக்பர் அலி, அந்த வெள்ளி நகைகளுடன் தலைமறைவானார். இதுகுறித்து நகைக்கடை ஊழியர் தியாகராஜன், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அக்பர் அலி மீது புகார் அளித்தார். போலீசார் தலைமறைவாக இருந்த அக்பர் அலியை நேற்று முன்தினம் மாங்காடு பட்டூர் எஸ்.கே.எம். நகரில் வைத்து கைது செய்தனர்.

The post பிரபல நகை கடையில் இருந்து 28 கிலோ வெள்ளியுடன் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: