காரைக்கால் சார் பதிவாளர் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பாவிட்டால் போராட்டம்

 

காரைக்கால்: காரைக்கால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் தெரிவித்ததாவது: காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், நிரவி, திருநள்ளாறு ஆகிய பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், காரைக்காலில் உள்ள அலுவலகத்துக்கு மட்டுமே சார் பதிவாளர் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். மற்ற 2 பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கும் இவரே கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.

இதனிடையே ஏப்.1 ம் தேதி லஞ்ச முறைகேடு காரணமாக சிபிஐ அதிகாரிகளால் காரைக்கால் சார் பதிவாளர் சந்திரமோகன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அப்பதவிக்கு புதிதாக வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அப்போதும் மற்ற 2 அலுவலகங்களுக்கும் சார் பதிவாளரை அரசு நியமிக்கவில்லை. இதனால், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மக்கள் நாள்தோறும் வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகள், ஊழியர்களை உடனடியாக புதுச்சேரி அரசு நியமிக்க வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்காலில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.

The post காரைக்கால் சார் பதிவாளர் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பாவிட்டால் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: