ஆவின் பாலகம் திறப்பு

செய்யூர்: சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆவின் பாலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆவின் பாலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. சித்தாமூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஏழுமலை கலந்து கொண்டு ஆவின் பாலக கட்டிடத்தை திறந்து வைதார். மேலும், மக்களுக்கு ஆவின் பாலகம் சார்ந்த குளிர்பானங்கள், தேநீர் இனிப்புகளை வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, சித்தாமூர் ஒன்றிய ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார், கவுன்சிலர் நாகப்பன், சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா, மதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆவின் பாலக முகவர் சர்மிளா நாகராஜன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

The post ஆவின் பாலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: