பிரிட்டனின் ஒரு அங்கமாகத் திகழும் ஸ்காட்லாந்து நாட்டில் 25 ஏக்கர் பரப்பளவு தீவு, ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவின் விற்பனையை கையாளும் கால்பிரைத் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தீவு தலைநகர் எடின்பர்க்கிலிருந்து 100 மைலிலும், லண்டனிலிருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவில், பெரிய கருப்பு முதுகு கொண்ட காளைகள் இருப்பதோடு, ராக் சீ லாவெண்டர் மற்றும் நறுமணமுள்ள ஆர்க்கிட் போன்ற அரிய தாவரங்களும் உள்ளதாக குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது.
The post ஸ்காட்லாந்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவு.. ரூ.1.50 கோடிக்கு விற்பனை..!! appeared first on Dinakaran.