ஈரமான மக்கா சோளம் வெயிலில் காயவைப்பு அரியலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி விழா

அரியலூர்:அரியலூர் எஸ் பி ஜி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் இயக்க எழுச்சி நாள் விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.விழாவுக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டாரத் தலைவர் நீதிபதி தலைமை வகித்தார். வட்டாரப் பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். வட்டாரச் செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வாசித்தார். ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் நம்பிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தொடர்ந்து, பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் நீலமேகம், கலியபெருமாள், தமிழகஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி,சுகிர்தராஜ், கருணாநிதி, ரவிச்சந்திரன், பூங்கொடி, தேவகி, ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆண்டிமடம் அருகே விபத்து

The post ஈரமான மக்கா சோளம் வெயிலில் காயவைப்பு அரியலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி விழா appeared first on Dinakaran.

Related Stories: