ஊராட்சி பைப்புகள் திருட்டு

 

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக சுமார் 30 பிவிசி பைப்புகள் கடந்த 9ம் தேதி வாங்கப்பட்டது. இதில் 18 பைப்புகளை கடந்த இரு நாட்களுக்கு முன் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி பைப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post ஊராட்சி பைப்புகள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: