வாலாஜாவில் 2 எம்ஜிஆர் சிலைகள் சேதம்

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஸ் நிலையம் நகராட்சி அலுவலகம் அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. அதேபோல் சோளிங்கர் சாலை திருப்பத்திலும் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைகளுக்கு எம்ஜிஆர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின்போது அதிமுகவினர் மரியாதை செலுத்துவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பழுதடைந்தது. அதனை அதிமுகவினர் சீரமைத்தனர்.

நேற்று நள்ளிரவு அந்த சிலையில் இருந்து கைப்பகுதி திடீரென உடைந்து விழுந்ததாக தெரிகிறது. அதேபோல் சோளிங்கர் சாலையில் உள்ள சிலை நள்ளிரவு வேகமாக வந்த லாரி ேமாதியதில் கல்வெட்டு உடைந்ததாக கூறப்படுகிறது. இதனை இன்று காலையில் பார்த்த அதிமுகவினர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் பழுது பார்த்த நிலையில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக நேற்றிரவு சிலையின் பகுதி உடைந்தது. ேசாளிங்கர் சாலையில் உள்ள மற்றொரு சிலை, நள்ளிரவு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக கல்வெட்டு உடைந்தது. யாரும் சேதப்படுத்தவில்லை. இதுதொடர்பாக அதிமுகவினர் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை. மேலும் பழுதடைந்த சிலைகளை தாங்களே சரி செய்து கொள்வதாக அதிமுகவினர் தெரிவித்து விட்டனர்’ என்றனர்.

The post வாலாஜாவில் 2 எம்ஜிஆர் சிலைகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: