காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்வாய் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் இரு குழந்தைகள் விஜய், பூமிகா ஆகியோர் ஏப்ரல் 14ம் தேதி ஏரியில் மூழ்கி பலியாகினர். நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக மூழ்கி சிறார்கள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: