கலவை: பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்றபோது நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ஒண்ணுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் கோபி(28). இவர் ராணிப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கோபி பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நாராயணபுரம் கிராமம் அருகே சென்றபோது காவனூரில் இருந்து வந்த நெல் அறுவடை இயந்திரமும், பைக்கும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்அறுவடை இயந்திரம் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலி appeared first on Dinakaran.
