பணிகள் விறுவிறுப்பு பேராவூரணி அருகே வாழ்வியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

பேராவூரணி, ஏப்.14: பேராவூரணி அருகே உள்ள அதம்பை வடக்கு பாவாணர் தோட்டத்தில் தமிழர் அறம் அமைப்பு சார்பில் வாழ்வியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நிறுவன தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீரப்பன், அப்பாவு, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கல்யாணசுந்தரம், பேராசிரியர் கோபி சந்திரசேகர், வக்கில் பிரகாசம் ஆகியோர் பேசுகையில், தமிழரின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் புத்தர், மார்க்சு கூறிய கருத்துக்கள் தமிழரின் வாழ்வியலோடு பொருந்தி உள்ளது பற்றியும் விளக்கமாக குறிப்பிட்டனர். கருத்தரங்கில் தொல்காப்பியரின் கூற்றுப்படி உணர்ந்து வாழ்வதும், உணர்த்தி வாழ்வதும் பண்பட்ட வாழ்வாகும் என வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கில் தஞ்சாவூர் கார்த்திக், பின்னையூர் அன்பழகன், சுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பணிகள் விறுவிறுப்பு பேராவூரணி அருகே வாழ்வியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: