ராமநாதபுரத்தில் செவிலியர்கள் போராட்டம்

ராமநாதபுரம், ஏப்.14: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்பி செவிலியர் சங்கத்தின் சார்பாக செவிலியர்கள் ஒன்றிணைந்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாத ஊதியத்தை 7ம் தேதிக்குள் வழங்க வேண்டும். மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பிற்கால வைப்பு நிதியை முறையாக வரவு வைக்கப்பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.900 உயர்த்தி வழங்க வேண்டும் என 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட செயலாளருமான மோகன்தாஸ், மாவட்ட தலைவர் தீபலட்சுமி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் வீரம்மாள், இணைச் செயலாளர் ஜோசப் ஜெயக்குமார் மற்றும் நிரந்தர செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் செவிலியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: