அவலூர்பேட்டையில் பேருந்து நிலையம்

மேல்மலையனூர், ஏப். 13: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டையில் நிலையான பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ள அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை, சேத்பட், கீழ் பெண்ணாத்தூர், மேல்மலையனூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல மையப் பகுதியாக உள்ள நிலையில் இவ்வழியாக போக்குவரத்து அதிக

அளவு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவலூர்பேட்டையை சுற்றியுள்ள ஏராளமான கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவலூர்பேட்டை வந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்தில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இத்தகைய சூழலால் அவலூர்பேட்டையில் நிலையான பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் சாலை ஓரக்கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் நிற்பதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அனைத்து பேருந்துகளும் பஜார் வழியாக வந்து செல்லும் சூழலில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே அவலூர்பேட்டையில் நிலையான பேருந்து நிலையத்தை அமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட அரசு முன் வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

The post அவலூர்பேட்டையில் பேருந்து நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: