திருச்சி கோர்ட்டில் சமரச தின விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஏப்.12: திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு துவக்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நேற்று காலை 18ம் ஆண்டு சமரச தின விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில் நடந்த சமரச தின பேரணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பாபு தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட சமரச தினப் பேரணி திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை சென்று, மீண்டும் நீதிமன்றத்தை வந்தடைந்தது.

பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், அரசு வக்கீல்கள், சமரசர்கள், சட்ட உதவி எதிர் தரப்பு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் சுய உதவிக்குழு மகளிர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சமரச தின விழா மற்றும் சமரச பேரணிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் 4வது கூடுதல் சார்பு நீதிபதியுமான மணிகண்டராஜா மற்றும் சமரச தீர்வு மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post திருச்சி கோர்ட்டில் சமரச தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: