கோஷ்டி மோதலில் ஒருவருக்கு வெட்டு

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே அடிமாலி ஊராட்சிக்குட்பட்ட இரும்புபாலம் பகுதியில் தோணிப்பாறை தர்ம சாஸ்தா கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சேர்ந்த இருதரப்பு இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், அரிவாளால் தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த சன்னிபாபு (30) பலத்த காயமடைந்தார்.க இச்சம்பவம் தொடர்பாக சில்லிதோடு 60 மைல் பகுதியை சேர்ந்த அகில் சத்யன் (27) என்பவரை அடிமாலி போலீசார் கைது செய்து, தொடுபுழா ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கோஷ்டி மோதலில் ஒருவருக்கு வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: