சென்னையில் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு; கதறும் குடும்பத்தினர்..!!

சென்னையில் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மடிப்பாக்கம் அருகே நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக சுவாமி நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட கோயில் அர்ச்சகர்கள் சுவாமியை கோயில் குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர். கோயில் குளத்தில் இறங்கியவர்களில் ஒருவர் மூழ்கியதாக தெரிகிறது.

அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இதனால், மேலும் 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

குளத்தில் மூழ்கியவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. தீவிர தேடுதலுக்கு பிறகு 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post சென்னையில் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு; கதறும் குடும்பத்தினர்..!! appeared first on Dinakaran.

Related Stories: