திருவில்லிபுத்தூர். மார்ச் 28: அனுமதியின்றி கனிம வளங்களை எடுத்த வழக்கில் கல்குவாரி உரிமையாளருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து, திருவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (46). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துள்ளதாக வந்த புகார் அடிப்படையில், திருவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குதிருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.