காளையார்கோவில், மார்ச் 28: காளையார்கோவில் அருகே கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 6.35 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை, கோ பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடைபெற்றன.